- கடலாதெனிய விகாரை கம்பளைக் காலத்தைச் சேர்ந்த ஒரு கலைப்படைப்பாகும்.
- கி.பி 1341-1351 காலத்தில் கம்பளையை ஆட்சி செய்த 4ஆம் புவனேகபாகு மன்னன் காலத்தில் தர்மகீர்த்தி தேரோவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சேனாதிலங்கார அமைச்சரின் தலைமையில் சத்தர்மதிலக எனும் கடலானெிய விகாரை நிர்மானிக்கப்பட்டது.
- கட்டிடக்கலைஞர் - கணேஸ்வராச்சாரியார்
- இது 3 பகுதிகளைக் கொண்டது
- 1ஆம் மண்டபம்
- அர்த்த மண்டபம்
- கர்ப்பக்கிரகம்
- விகாரையில் மேல் தளம் கருங்கல்லால் ஆனது.
- கூரை தட்டையானது கீழ்த் தளத்தில் நடனக்காரர், மேளக்காரர் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வுருவங்கள் உயிரோட்டமும் அசைவும்காட்டப்பட்டுள்ளது.
- தென்னிந்திய விஜய நகர இந்து கட்டடக் கலையின் செல்வாக்கு காணப்படுகின்றது.
- 12 அடி உயரம் கொண்ட அடித்தளத்தில் அமர்ந்த நிலையில் 4 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
- 8 திசையிலும் 8 யானை உருவம் செதுக்கல் முறையில் வைக்கப்பட்டுள்ளது.
- 40 அடி உயரமான தூபி நிர்மானிக்கப்பட்டுள்ளது. தூபியை சுற்றி 4 சிறிய சைத்தியம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment